என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுவாஞ்சேரி அருகே தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி நாட்டுப்புற கலைஞர் பலி
    X

    கூடுவாஞ்சேரி அருகே தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி நாட்டுப்புற கலைஞர் பலி

    • கூடுவாஞ்சேரி அருகே கணேஷ் மற்றும் உடன் வந்த ஆறுமுகம் ஆகியோர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
    • தாம்பரம் ரெயில்வே போலீசா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம்:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் கணேஷ் (வயது 58). நாட்டுப்புற கலைஞர் இவர் கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் நடந்த கோவில் திருவிழாவில் தனது குழுவினருடன் தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு அவர்கள் திரும்பி வந்தனர். கூடுவாஞ்சேரி அருகே கணேஷ் மற்றும் உடன் வந்த ஆறுமுகம் ஆகியோர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் கணேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார். அவர் பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×