என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே கூலி தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
- முன்விரோதம் காரணமாக யாராவது சண்முகம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
- கூலி தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சவுண்டப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (47) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இவர் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் ஒரு பாட்டிலில் இருந்த பெட்ரோல் சிதறி தீப்பிடித்து கருகியது. மற்றொரு பாட்டிலில் இருந்த பெட்ரோல் தீப்பிடிக்காமல் அப்படியே கிடந்தது.
சத்தம் கேட்டு எழுந்த வந்த சண்முகம் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. நீலகண்டன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது முன்விரோதம் காரணமாக யாராவது சண்முகம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் எங்கேயாவது கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் போலீஸ் துப்பறியும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
கூலி தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






