என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலையேறியபோது மூச்சுத்திணறல்- சதுரகிரிக்கு சென்ற பழ வியாபாரி மரணம்
    X

    மலையேறியபோது மூச்சுத்திணறல்- சதுரகிரிக்கு சென்ற பழ வியாபாரி மரணம்

    • வழுக்குப்பாறை கடந்து சிறிது தூரம் சென்ற போது வடிவேலுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • சோர்வடைந்த வடிவேல் திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருச்சி சிந்தாமணி தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 50). பழ வியாபாரியான இவர் தனது நண்பர்களுடன் நேற்று சதுரகிரிக்கு வந்தார். காலையில் தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து வடிவேல் மலையேறி சென்று கொண்டிருந்தார்.

    வழுக்குப்பாறை கடந்து சிறிது தூரம் சென்ற போது வடிவேலுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து மலையேற முடியவில்லை. சோர்வடைந்த அவர் திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு டோலி மூலம் மலைஅடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×