என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரத்தில் கோடைக்கால இலவச சமயபயிற்சி வகுப்பு
    X

    காஞ்சிபுரத்தில் கோடைக்கால இலவச சமயபயிற்சி வகுப்பு

    • காஞ்சிபுரத்தில் உள்ள திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் கோடைக்கால இலவச சமயபயிற்சி வகுப்பு.
    • பயிற்சி வகுப்பில் சைவ சித்தாந்த நூல்கள் விரிவாக பயிற்றுவிக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் கோடைக்கால இலவச சமயபயிற்சி வகுப்பு வருகிற மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த பயிற்சி வகுப்பில் சைவ சித்தாந்த நூல்கள் விரிவாக பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு வயது வரம்பு 70-க்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான விண்ணப்பத்தினை காஞ்சிபுரம், பங்காரம்மன் தோட்டத்தில் உள்ள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 24-ந்தேதிக்குள் வந்து சேரவேண்டும். இந்த தகவலை அறக்கட்டளை நிறுவனர் சதாசிவம் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×