search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடம்பத்தூர் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலி
    X

    கடம்பத்தூர் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலி

    • பலத்த காயம் அடைந்த அன்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    கடம்பத்தூர் அருகே உள்ள செஞ்சிபனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்.இவர் தி.மு.க.வில் கிளை செயலாளராகவும் இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவர் மடத்துக்குப்பம் பகுதியில் துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இரவு அன்பு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ராமன்கோவில் ரெயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தின் மீது வேகமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அன்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×