search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
    X

    தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

    • படகில் இருந்து கிளைண்டன் தவறி விழுந்துவிட்டார்.
    • கிளைண்டனின் உடல் முயல்தீவு பகுதியில் மிதந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி போல்டன் புரத்தை சேர்ந்தவர் கிளைண்டன்(வயது 45). மீனவரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சக மீனவர்கள் 4 பேருடன் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

    அப்போது முயல்தீவு பகுதியில் எதிர்பாராத விதமாக படகில் இருந்து கிளைண்டன் தவறி விழுந்துவிட்டார். உடனே சக மீனவர்கள் அவரை மீட்க போராடினர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    இதையடுத்து நேற்று 2-வது நாளாக தேடிய பின்னர் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்களும் நேற்று இரவு வரை தேடிய நிலையில் உடல் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை கிளைண்டனின் உடல் முயல்தீவு பகுதியில் மிதந்தது. அதனை மீனவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    Next Story
    ×