என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் பாதுகாப்பாக பட்டாசு விற்க வியாபாரிகளுக்கு பயிற்சி- தீயணைப்பு துறையினர் ஏற்பாடு
திருவள்ளூர்:
தீபாவளிப் பண்டிகையையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக பட்டாசு விற்பனை செய்வது குறித்து தீயணைப்புத் துறையினர், கடை உரிமையாளர்களுக்கு செயல் முறை விளக்கம் பயிற்சி அளித்தனர்.
பட்டாசு கடையில் மற்ற பொருள்களை விற்பனை செய்யக் கூடாது, குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தக் கூடாது, ஈரசாக்குப்பை, தண்ணீர், மணல் வாளி உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும், உதிரிப் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது, கடையைச் சுற்றியுள்ள பகுதிகளில் யாரும் புகை பிடிக்காமல் கண்காணிக்க வேண்டும், அதிக ஒளி, வெப்பம் பரவும் மின் விளக்குகளை அமைக்கக் கூடாது, தீயணைப்பு நிலைய தொலைபேசி எண்ணை எழுதி வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்த செயல்முறை விளக்கம், பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு மாவட்ட அலுவலர் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலர் வில்சன், நிலைய அலுவலர் இளங்கோ மற்றும் 50க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.






