என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நிறுவனத்திடம் விற்பனை செய்த நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும்- விவசாய சங்க நிர்வாகிகள் மனு
    X

    தனியார் நிறுவனத்திடம் விற்பனை செய்த நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும்- விவசாய சங்க நிர்வாகிகள் மனு

    • தீவளூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • கடந்த சில ஆண்டுகளாக தனியார் சிமெண்ட் நிறுவனம் நிலத்தை விலைக்கு வாங்கி வருகிறது.

    கடலூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் வாசுதேவன் தலைமையில் மார்க்சிஸ்I கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலையில் தீவளூர் பகுதி விவசாயிகள் கலெக்டர் பாலசுப்பிர மணியத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீவளூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான குடும்பத்தினர் உழவு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக தனியார் சிமெண்ட் நிறுவனம் நிலத்தை விலைக்கு வாங்கி வருகிறது. விலைக்கு வாங்கும் போது, எப்போது சிமெண்ட் ஆலை அமைக்க வருகிறோமோ அதுவரை நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

    ஆனால் தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விலைக்கு வாங்கிய நிலங்களில் உள்ள வரப்புகளை எல்லாம் களைத்து பயிர் செய்வதை தடுத்து விட்டனர். இதனால் உழவு தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வந்த எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனம் தனது நிறுவனத்தை தீவளூரில் தொடங்கும் வரை நாங்கள் விவசாய தொழிலை தொடர அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×