என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
- பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
- பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் பிரச்சினைகளையும் தெரிவித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் பிரச்சினைகளையும் தெரிவித்தனர். இதில் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும்.
பல்வேறு துறைகளில் முடிவு எடுக்கக் கூடிய அதிகாரிகள் பங்கேற்காமல் கடைநிலை ஊழியரை கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் விவசாயிகளின் குறைகளுக்கு முடிவு எட்டப்படாமல் தொடர் கதையாகிறது என்று குற்றம் சாட்டினார்கள்.
Next Story






