என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூச்சி மருந்து குடித்து விவசாயி பலி
- பூச்சி மருந்து குடித்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி செங்காளம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 33). விவசாயி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வாகன விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு காரணமாக வீட்டில் இருந்து வந்தார். குடும்பத்தை சரியாக கவனிக்க முடிய வில்லை என மனமுடைந்தார்.
கடந்த 5-ந் தேதி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். அக்கம், பக்கத்தினர் அவரை பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்துவிட்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






