என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எண்ணூரில் விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலையில் தங்கையின் கணவர் கைது
    X

    எண்ணூரில் விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலையில் தங்கையின் கணவர் கைது

    • தனசேகரோடு கடந்த சில நாட்களாக சுற்றிவந்த அவரது தங்கையின் கணவர் சீனிவாசன் தலைமறைவாக இருந்தார்.
    • மறுநாள் பகலில் வந்து கொலைக்கு பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த கல்லை எடுத்து கழுவி வேறு இடத்தில் போட்டு விட்டு தலைமறைவாகி விட்டேன்.

    எண்ணூரை அடுத்த சின்ன எர்ணாவூர் 4-வது தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது48). விடுதலை சிறுத்தைகள் கட்சியில் திருவொற்றியூர் தொகுதி துணை செயலாளராக இருந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தீபா மகனுடன் திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். தனசேகர் மட்டும் வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

    நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் தனசேகர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனசேகர் சாவில் சந்தேகம் இருப்பதாக விடுதலை சிறுத்தை கட்சியினரும் மாவட்ட செயலாளர் அன்பு செழியன் தலைமையில் திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே தனசேகரோடு கடந்த சில நாட்களாக சுற்றிவந்த அவரது தங்கையின் கணவர் சீனிவாசன் தலைமறைவாக இருந்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையிலான போலீசார் மணலி புதுநகர் அருகே நடந்து சென்ற சீனிவாசனை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தனசேகரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். அவர்போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தனசேகரின் தங்கையான எனது மனைவி சின்னப் பொண்ணு குடும்பதகராறில் பிரிந்து சென்று போரூரில் வசித்து வருகிறார். அவரை என்னுடன் சேர்ந்து வாழ வைக்கும் படி தனசேகரிடம் கூறினேன். ஆனால் இதற்கு தனசேகர் எதிர்ப்பு தெரிவித்து சேர்த்து வைக்க மறுத்தார். இதனால் ஆத்திர மடைந்த நான் கடந்த 12-ந்தேதி வீட்டில் போதையில் தூங்கி கொண்டு இருந்த தனசேகரின் தலை மீது கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டேன்.

    பின்னர் மறுநாள் பகலில் வந்து கொலைக்கு பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த கல்லை எடுத்து கழுவி வேறு இடத்தில் போட்டு விட்டு தலைமறைவாகி விட்டேன்.

    இவ்வறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×