search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி
    X

    பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி

    • வழுதிகை மேடு டோல்கேட் அருகே வந்த போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது திடீரென ரோந்து வாகனம் மோதியது.
    • இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பெரியபாளையம்:

    செங்குன்றம் அடுத்த நாராவாரிக்குப்பம், சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் மாரநாத சுவிசேஷ்(வயது18). இவர் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் வீட்டில் இருந்து கல்லூரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை பஸ் நிறுத்தம் அருகே செங்குன்றம்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர் மாரநாத சுவிசேஷ் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மஞ்சங்காரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவர் மாரநாத சுவிசேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், போலீஸ்காரர் வெங்கட்ராமன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து வாகனத்தில் மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் பணியில் இருந்தனர். வழுதிகை மேடு டோல்கேட் அருகே வந்த போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது திடீரென ரோந்து வாகனம் மோதியது. இதில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×