search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலையூரில் சாமி கும்பிட தீபம் ஏற்றிய போது புடவையில் தீப்பற்றி மூதாட்டி பலி
    X

    சேலையூரில் சாமி கும்பிட தீபம் ஏற்றிய போது புடவையில் தீப்பற்றி மூதாட்டி பலி

    • பலத்த தீ காயம் அடைந்த மூதாட்டியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சேலையூர் பராசக்தி நகர் சுந்தரம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பத்மநாதன். அவரது மனைவி சாந்தா (வயது 72). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இதனால் வீட்டில் கணவன்- மனைவி இருவர் மட்டுமே வசித்து வருகின்றனர்.

    நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மாலையில் வீட்டிலிருந்த பூஜை அறையில் விளக்கு ஏற்றி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக புடவையில் தீப்பற்றி மளமளவென எரிந்துள்ளது. அவரது கதறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர்.

    பலத்த தீ காயம் அடைந்த மூதாட்டியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×