search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு

    • நாமக்கல் மற்றும் பல்லடத்தில் கறிக்கோழிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • பல ஆயிரக்கணக்கான பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் லட்சக்கணக்கான கறிக்கோழிகள், நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் 4 கோடிக்கு அதிகமான முட்டைகள் வடமாநிலங்கள் மற்றும் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் தமிழகத்தின் தேவைக்கும், சத்துணவுக்கும் முட்டைகள் இங்கு இருந்து விநியோகிக்கப்படுகிறது.

    இந்நிலையில், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 2 வாரமாக உயர்ந்து வருகிறது. நேற்று என்.இ.சி.சி மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தி அறிவித்தார். இதை அடுத்து முட்டை பண்ணை கொள்முதல் விலை 500 காசில் இருந்து 510 காசாக உயர்ந்துள்ளது.

    வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் குளிரால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல நாமக்கல் மற்றும் பல்லடத்தில் கறிக்கோழிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் லட்சக்கணக்கான கறிக்கோழிகள், நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் கறிக்கோழியின் விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    பல்லடத்தில் கறிக்கோழி கொள்முதல் விலை நேற்று 112 ரூபாயாக இருந்தது. இன்றும் அதே‌ விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் உரித்த கோழி ஒரு கிலோ 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் கறிக்கோழி தேவை அதிகரிக்கும் என்பதால் மேலும் விலை உயரும் என்று கறிக்கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×