search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி விலை ரூ.5 உயர்வு
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி விலை ரூ.5 உயர்வு

    • முட்டை விலை 410 காசுகளாக நீடிப்பதால், தீவனப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் பண்ணையாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.
    • ரூ.72 ஆக இருந்த முட்டை கோழி விலை ரூ.77 ஆக நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை 410 காசுகளாக நீடிப்பதால், தீவனப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் பண்ணையாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் மைனஸ் 40 என்ற அளவிற்கு மிகாமல் முட்டை விற்பனை செய்ய தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு எவரேனும் 40 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள், அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    அனைத்து பண்ணையாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த மைனஸ் என்ற விரும்பத்தகாத ஒன்றை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும் கிழக்கு கடற்கரை மீன்பிடித் தடை காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ஏற்படும் மீன் தட்டுப்பாடு காரணமாக முட்டை விற்பனை அதிகரித்து, வரும் நாட்களில் முட்டை விலை உயர வாய்ப்பு உள்ளது.

    வரும் நாட்களில் கேரளாவில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களை அனுசரித்து, அறிவிக்கப்பட்ட மைனசிற்கு மட்டுமே முட்டைகளை விற்று பயனடையலாம் என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே ரூ.72 ஆக இருந்த முட்டை கோழி விலை ரூ.77 ஆக நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. கறிக்கோழி விலை 105 ரூபாயாக நீடிக்கிறது.

    Next Story
    ×