என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி டிரைவர் பலி
    X

    ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி டிரைவர் பலி

    • திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்.
    • பென்னலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 27). வேன் டிரைவர். சீனிவாசன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் புறப்பட்டார். ஊத்துக்கோட்டை நகர எல்லையில் புதிய மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அனந்தேரியிலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி நெல் முட்டைகளுடன் வந்து கொண்டிருந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் படுகாயம் அடைந்தார். அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இறந்தார். இதுகுறித்து பென்னலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×