என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அயனாவரம், பெரம்பூர், செம்பியம், திரு.வி.க.நகர் பகுதியில் குடிநீர் நிறுத்தம்
    X

    அயனாவரம், பெரம்பூர், செம்பியம், திரு.வி.க.நகர் பகுதியில் குடிநீர் நிறுத்தம்

    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    • அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.

    சென்னை:

    கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் உந்து பிரதான குழாயில் இணைப்புப் பணிகள் 21-ந்தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

    பகுதி 6-க்குட்பட்ட அயனாவரம், ஏகாங்கி புரம், பெரம்பூர், செம்பியம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாயின் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.

    பகுதி பொறியாளர்-6 தொலைபேசி எண்: 8144930906 (திரு.வி.க.நகர்), துணை பகுதி பொறியாளர்-16 தொலைபேசி எண்:8144930216, துணை பகுதி பொறியாளர்-17, தொலைபேசி எண்: 8144930217 ஆகியோரை தொடர்பு கொள்ளும்படி சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×