என் மலர்
உள்ளூர் செய்திகள்

நரசிங்கபுரம் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பயன் பெற ஏதுவாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்
- பொதுமக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கினார்.
- பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ வும் திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கி ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் நரசிங்கபுரம் அரசினர் ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் ஏதுவாக ரூபாய் 4 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை துவக்கி வைத்து பார்வையிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி, கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி மோகனசுந்தரம், மாவட்ட விவசாய பிரிவு நிர்வாகிகள் ஆர்.டி.இ. ஆதிசேஷன், களாம்பாக்கம் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூண்டி மோதிலால் உட்பட கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






