என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் விநியோகம்
- பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
- வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் நேரிடையாக வழங்கப்பட்டு வருகிறது.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது பல்வேறு இடங்களில் தொற்று நோய், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன.
இதனை தடுக்கும் பொருட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் ஏற்பாட்டில் அப்பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் நேரிடையாக வழங்கப்பட்டு வருகிறது.
பஜனை கோவில் தெரு அரசூர் சாலை, வேணு கோபால் தெரு ஆற்றங்கரை ரோடு, உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் உள்ள வீடுகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Next Story






