search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய தி.மு.க பிரமுகர் சிறையில் அடைப்பு
    X

    கைதான அந்தோணிராய்.

    மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய தி.மு.க பிரமுகர் சிறையில் அடைப்பு

    • தி.மு.க. நிர்வாகியும், உவரி மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணி ராய் என்பவர் உத்திராண்டு ராமனிடம் தகராறு செய்தார்.
    • உத்திராண்டு ராமனை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடித்ததாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ராதாபுரம் மீன்வளத்துறை ஆய்வாளர் உத்திராண்டு ராமன் மற்றும் உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுருக்குமடி‌ வலையில் பிடித்த மீன்களை பறிமுதல் செய்தார்.

    அப்போது அங்கு வந்த பரதர் உவரியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகியும், உவரி மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணி ராய் (வயது 43) என்பவர் உத்திராண்டு ராமனிடம் தகராறு செய்தார். அவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து மீன்வள ஆய்வாளர் உவரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா ஸ்டாலின் விசாரணை நடத்தினார்.

    அதில் அவர் அரசு பணியை செய்ய விடாமல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதையடுத்து அவர்மீது 353-அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், 294(பி)-அவதூறாக பேசுதல், 506(2)-கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

    இதனை அறிந்த அந்தோணி ராய் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×