என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர் பேரூராட்சியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    மீஞ்சூர் பேரூராட்சியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

    • எரிவாயு சுடுகாடு கட்டிட, பணிகளை மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் திடீரென ஆய்வு செய்தார்.
    • கட்டிடத்தின் தரம் குறித்து கேட்டறிந்து சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சாலை பணிகள், மற்றும் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எரிவாயு சுடுகாடு கட்டிட, பணிகளை மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் திடீரென ஆய்வு செய்தார்.

    அப்போது கட்டிடத்தின் தரம் குறித்து கேட்டறிந்து சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதில் உதவி இயக்குனர் கண்ணன், உதவி பொறியாளர் முத்து, செயல் அலுவலர் வெற்றி அரசு பேரூராட்சி தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர் வார்டு உறுப்பினர்கள் சுகன்யா, அபூபக்கர், ரஜினி, நக்கீரன், ஜெயலட்சுமிதன்ராஜ், மற்றும் அதிகாரிகள் பலர் உடன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×