என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே காட்டன் சூதாட்டம் நடத்தியவர் கைது
- பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்.
- காட்டன் சூதாட்டம் எழுதி விற்பனை செய்வதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (32). இவர் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் மாதா சிலை அருகில் காய்கறி கடை நடத்தி வருகிறார். காய்கறி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் எழுதி விற்பனை செய்வதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆய்வு செய்ததில் அவரிடமிருந்து 2500 ரூபாய் பணம் மற்றும் துண்டு சீட்டு எழுதப்பட்ட நம்பர்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






