search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடுமுடி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
    X
    தற்கொலை செய்து கொண்ட மாணவி தேவதர்ஷினி.

    கொடுமுடி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

    • தேவதர்ஷினி கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • இன்று அதிகாலை இவர் தனது வீட்டில் சமையல் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொந்தாளம் மண் திட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு தேவதர்ஷினி (18) என்ற மகளும், சரவணன் என்ற ஒரு மகனும் உள்ளார்.

    தேவதர்ஷினி கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று அதிகாலை இவர் தனது வீட்டில் சமையல் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார்.

    பின்னர் அருகில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அருகில் தேடிப்பார்த்தனர்.

    அப்போது மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு தோட்டத்து கிணற்றின் கரையில் மாணவி தேவதர்ஷினியின் செருப்பு கிடந்தது. இதையடுத்து கிணற்றை எட்டிபார்த்த போது மாணவி கிணற்றில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கொடுமுடி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டனர். போலீசாரின் விசாரணையில் மாணவி தேவதர்ஷினி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×