

கடலூர்:
கடலூர் அருகே திருமாணிக்குழி சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார்.
சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகளை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.