என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
- ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
- போலீஸ் துணை கண்காணிப்பாளர் விக்னேஷ், தலைமை ஆசிரியர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய வழிமுறைகள், படிக்க வேண்டிய வழிமுறைகள், குறித்து பேசினார். நிகழ்ச்சியில் திருத்தணி போலீஸ் துணை கண்காணிப்பாளர் விக்னேஷ், தலைமை ஆசிரியர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






