என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
- திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் பகுதியில் கிருபானந்த வாரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
- கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீரென வந்து ஆய்வு செய்தார்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் பகுதியில் கிருபானந்த வாரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீரென வந்து ஆய்வு செய்தார். அவர், மாணவர்களிடம் கல்வி முறை மற்றும் சுகாதாரம் வகுப்பறைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டு அறிந்தார்.
மேலும் பள்ளிக்கு ஆசிரியர் வருகை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். சத்துணவு கூடத்தை பார்வையிட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் மாணவர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட்டார். முன்னதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை ஊராட்சி தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது அவர், பள்ளி அருகே உள்ள சாலை மிகவும் குறுகலாக போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. இந்த சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து கோரிக்கையை மனுவாக வழங்குமாறும், நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் உறுதியளித்தார்.






