search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் அறிவிப்பு
    X

    அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் அறிவிப்பு

    • விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    • மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு, சமூக நல துறையின் சார்பில், 2023-ம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் உலக மகளிர் தின விழா அன்று மார்ச் 2023-ல் வழங்கப்பட உள்ளது.

    மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

    10.12.2022-க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் மாவட்ட சமூக நல அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் இரு பிரதிகளை நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×