search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் வெடிப்பு சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டவர் மீது வழக்கு
    X

    கார் வெடிப்பு சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டவர் மீது வழக்கு

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் கே.சுவாமி என்பவர் இரு தரப்பினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையிலான கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
    • கோவை சைபர் கிரைம் போலீசார் கிஷோர் கே.சுவாமி என்பவர் மீது 153 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ந்தேதி உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அளவில் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் கே.சுவாமி என்பவர் இரு தரப்பினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையிலான கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

    இதுபற்றி கண்காணித்து வந்த கோவை சைபர் கிரைம் போலீசார் கிஷோர் கே.சுவாமி என்பவர் மீது 153 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×