என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூய்மை பணி ஓவியப்போட்டி: வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு
செங்கல்பட்டு மண்டலத்தில் உள்ள 18 நகராட்சிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.
வண்டலூர்:
தூய்மை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு மண்டலத்தில் உள்ள 18 நகராட்சிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மறைமலை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
நகராட்சி ஆணையர் லட்சுமி, நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக் கண்ணன், முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவமுருகன், டாக்டர் மீராபாய், மறைமலை நகர் சுகாதார ஆய்வாளர் ஹனிபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






