என் மலர்
உள்ளூர் செய்திகள்

100 அடி உயர குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை
- குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
குரோம்பேட்டையை அடுத்த ஜமீன்ராய பேட்டையை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (வயது30). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் இரவு மது போதையில் வந்த ஆனந்த்ராஜ் திடீரென வீட்டின் அருகே எரிகரை தெருவில் உள்ள 100 அடி உயரம் கொண்ட குடிநீர் தொட்டியின் மீது ஏறினார். சிறிது நேரத்தில் அவர் குடிநீர்தொட்டியின் உச்சிக்கு சென்றார். பின்னர் ஆனந்த்ராஜ் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆனந்த்ராஜை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆனந்த்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
ஆனந்த்ராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






