என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
- சமூக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்.
- பெண் குழந்தைகளுக்கு கல்வி, விழிப்புணர்வு, மன தைரியம், பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.
பொன்னேரி நகராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பெண் குழந்தைகளுக்கு கல்வி, விழிப்புணர்வு, மன தைரியம், பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன, ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் கோபிநாத், துணைத் தலைவர் விஜயகுமார், மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தீஸ்வரி மாவட்ட குழந்தைகள் நல தலைவர் மேரி அக்சிலியா, கவுன்சிலர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






