என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மீது சென்னை ஆம்னி பஸ் மோதி விபத்து: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
    X

    லாரி மீது சென்னை ஆம்னி பஸ் மோதி விபத்து: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

    • தொழுப்பேடு மேம்பாலம் அருகே முன் பக்கம் டயர் வெடித்து கார் ஒன்று சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது.
    • போக்குவரத்து 2 மணி நேரத்துக்கு மேலாக பாதித்தது.

    மதுராந்தகம்:

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு தொழுப்பேடு மேம்பாலம் அருகே முன் பக்கம் டயர் வெடித்து கார் ஒன்று சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் காரை கடந்து செல்வதற்காக வலது பக்கமாக முன்னோக்கிச் சென்ற லாரியின் மீது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ் மோதியது.

    இந்த சாலை விபத்தால் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் முழுவதும் சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சாலை விபத்தை தொடர்ந்து சென்னை நோக்கி சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சென்னைக்கு செல்லும் வாகனங்கள் எதிர் திசையில் சென்றதால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு பக்கமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் மற்றும் போக்குவரத்து ரோந்து போலீசார் விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்து 2 மணி நேரத்துக்கு மேலாக பாதித்தது.

    Next Story
    ×