என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பூந்தமல்லி ஜெயிலில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
    X

    பூந்தமல்லி ஜெயிலில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர்.
    • பூந்தமல்லி கிளை சிறையில் இந்த மாதத்தில் தொடர்ந்து 2-வது முறை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர். எண்ணூரை சேர்ந்த கார்த்திகேயன். இவர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் சூப்பிரண்டு முத்துராமன் மற்றும் அதிகாரிகள் சிறையில் உள்ள கைதிகளின் அறையை திடீரென ஆய்வு செய்தனர்.

    அப்போது பாஸ்கர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் அடைக்கப்பட்டு இருந்த அறையில் உள்ள கழிவறையில் செல்போன், சார்ஜர், சிம்கார்டு மற்றும் செல்போன் பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைத்தது? சிறையில் அவர்களுக்கு உதவியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி கிளை சிறையில் இந்த மாதத்தில் தொடர்ந்து 2-வது முறை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×