search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு
    X

    பழனியில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

    • காரை நிறுத்தி கோவிந்தராஜ் சோதனை செய்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து வந்து கார்மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பழனி:

    பழனி அருகே உள்ள கொழுமம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் இன்று காலை தனது வேலை நிமித்தமாக காரில் பழனி நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்தபோது திடீரென அவரது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதைபார்த்ததும் சாலையில் சென்றவர்கள் சத்தம் போட்டு அவருக்கு தெரிவித்தனர். உடனே காரை நிறுத்தி கோவிந்தராஜ் சோதனை செய்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து வந்து கார்மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இருந்தபோதும் இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் திருமண மண்டபம் அருகே நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×