என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம் அருகே நின்ற லாரி மீது கார் மோதல்- பெண் பலி
- விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
திண்டிவனத்தை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மனைவி ராஜபிரியா (வயது 38). இவர்கள் இன்று அதிகாலை மகன், மகளுடன் சென்னை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தார்.
மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம்பேடு பகுதியில் வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது திடீரென கார் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ராஜபிரியா செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது கணவர் வசந்தகுமார் மற்றும் மகள், மகன்ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






