search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி மூதாட்டி பலி
    X

    அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி மூதாட்டி பலி

    • சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மூதாட்டி பொன்னம்மாள் மீது மோதியது.
    • மூதாட்டி சம்பவ இடத்தில் பலியானார்.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூரைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி பொன்னம்மாள் (வயது70). இவர் இன்று காலை உறவினர் வீட்டிற்கு செல்ல மேல்மருவத்தூரில் இருந்து அச்சரப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மூதாட்டி பொன்னம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார்.

    இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×