என் மலர்
உள்ளூர் செய்திகள்

வில்லிவாக்கத்தில் போதையில் கார் ஓட்டிய பா.ஜனதா பிரமுகர் கைது
- நரசிம்மன் தனது காரில் வில்லிவாக்கம் நாதமுணி அருகே சென்று கொண்டிருந்தார்.
- திடீரென சாலை ஓரத்தில் இருந்த நான்கு பேர் மீது கார் மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்
அம்பத்தூர்:
வில்லிவாக்கம் அகத்தியர் நகரை சேர்ந்தவர் நரசிம்மன். பாஜகவில் முன்னாள் தொழில் துறை மாநிலச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் நேற்று இரவு 8 மணி அளவில் தனது காரில் வில்லிவாக்கம் நாதமுணி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலை ஓரத்தில் இருந்த நான்கு பேர் மீது கார் மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து நரசிம்மன் தப்பி ஓட முயற்சித்தார். பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






