என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சமூக வலைதளத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறு புகைப்படம் பதிவிட்டவர் கைது
    X

    சமூக வலைதளத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறு புகைப்படம் பதிவிட்டவர் கைது

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலெட்சுமி முத்துகுமாரை கைது செய்து சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • அவரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை சந்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 35). நகை தொழிலாளி. இவர் சமூக வலைதளங்களில் முதலமைச்சர் படத்தை அவதூறாக சித்தரித்து கருத்துக்களை பதிவிட்டு உள்ளதாக அவர் மீது திசையன்விளை நகர தி.மு.க. செயலாளர் ஜாண் கென்னடி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலெட்சுமி முத்துகுமாரை கைது செய்து சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×