என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூர் அருகே லாரி டிரைவர்களிடம் வழிப்பறி- 3 பேர் கைது
    X

    அம்பத்தூர் அருகே லாரி டிரைவர்களிடம் வழிப்பறி- 3 பேர் கைது

    • சென்னைக்கு வரும் கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு டிரைவர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம்.
    • அம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள டோல்கேட் அருகே வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு டிரைவர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். அவர்களை நோட்டமிட்டு மர்ம நபர்கள் தொடர்ந்து செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மாதனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன், அமர்நாத், சுதர்சன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×