search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8.4 கிலோ போலி நகை மோசடி- ஆரணி நகர கூட்டுறவு வங்கி நிர்வாக குழு கலைப்பு
    X

    ஆரணி நகர கூட்டுறவு வங்கி.


    8.4 கிலோ போலி நகை மோசடி- ஆரணி நகர கூட்டுறவு வங்கி நிர்வாக குழு கலைப்பு

    • கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் 5 சவரன் தங்க நகை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தது.
    • இதனால் வங்கி மதிப்பீட்டாளர் மோகன் என்பவர் சுமார் 8.4 கிலோ போலியாக நகை வைத்து பணத்தை கையாடல் செய்துள்ளார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தேவிகாபுரம் சாலையில் உள்ள கூட்டுறவு நகர வங்கி கிளை இயங்கி வருகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டில் வங்கியின் மேலாளராக ஆரணியை சேர்ந்த லிங்கப்பா நகை மதிப்பீட்டாளராக மோகன் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

    மேலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் 5 சவரன் தங்க நகை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தது.

    இதனால் வங்கி மதிப்பீட்டாளர் மோகன் என்பவர் சுமார் 8.4 கிலோ போலியாக நகை வைத்து பணத்தை கையாடல் செய்துள்ளார்.

    செய்யார் துணை பதிவாளர் கமலக்கண்ணன் சென்னையில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவில் அளித்த புகாரின் பேரில் ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், கிளார்க் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் ஆரணி நகர வங்கியின் கூட்டுறவு நிர்வாக தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளர் அசோக்குமார் துணை தலைவர் ஏ.ஜி.ஆனந்த் ஆகிய 2 பேரிடம் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு கடந்த 11.03.22 அன்று நகர கூட்டுறவு வங்கி மேலாளர் லிங்கப்பா மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட 4 பேரை வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    இதனையடுத்து புதிய ஆரணி கூட்டுறவு வங்கி தலைவராக ஏ.ஜி.ஆனந்த் என்பவர் நியமிக்கபட்டார்.

    இதனை தொடர்ந்து ஆரணி நகர கூட்டுறவு சங்கத்தில் கையாடல் மற்றும் ஊழல் செய்தது நிரூபணம் ஆனதால் ஆரணி கூட்டுறவு சங்க நிர்வாக குழுவை கலைத்து திருவண்ணாமலை மாவட்ட இணை பதிவாளர் நடராஜன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×