என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாம்பரத்தில் 60 மரங்கள் முறிந்து விழுந்தது
- மாண்டஸ் புயலினால் தாம்பரம் பகுதியில் அதிகபட்சமான மழை பதிவானது.
- புயலினால் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட மரங்கள் கீழே விழுந்தது.
தாம்பரம்:
மாண்டஸ் புயலினால் தாம்பரம் பகுதியில் அதிகபட்சமான மழை பதிவானது.
இந்த புயலினால் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட மரங்கள் கீழே விழுந்தது.
இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
அதேபோல தாம்பரம் சுரங்கப்பாதை, வள்ளல் யூசுப் நகர், லட்சுமி நகர், ஜெயேந்திர நகர், திருமலை நகர், தாம்பரம் காசநோய் மருத்துவமனை என பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் கொண்டு வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புயல் காரணமாக நேற்று இரவு முதல் தாம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மழை பாதிப்பு பகுதிகளை வெள்ள தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ஜான் லூயிஸ், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை உடனுக்குடன் செய்து முடிக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தயார் நிலையில் இருந்ததால் பெரும் பாதிப்புகள் ஏற்படவில்லை.






