search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    50 மாணவர்களின் தலைமுடியை பள்ளியிலேயே வெட்டிய ஆசிரியர்கள்
    X

    50 மாணவர்களின் தலைமுடியை பள்ளியிலேயே வெட்டிய ஆசிரியர்கள்

    • திருவூரில் அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏராளமனோர் தங்களது தலைமுடியை ஒழுங்கற்ற முறையில் வெட்டி ஸ்டைலாக வலம் வந்தனர்.
    • ஒழுங்கற்ற முறையில் தலைமுடியுடன் வந்த 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பை சேர்ந்த சுமார் 50 மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியின் மரத்தடியில் அமரவைத்தனர்.

    திருவள்ளூர்:

    பள்ளி மாணவர்கள் விதவிதமாக தங்களது தலைமுடியை வெட்டி வலம் வருகிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தும் கேட்பதில்லை.

    இந்த நிலையில் விதவிதமான தலைமுடி ஸ்டைலில் வந்த மாணவர்களின் தலைமுடிய பள்ளியிலேயே ஆசிரியர்கள் நறுக்கிய ருசிகர சம்பவம் நடந்து உள்ளது.

    திருவள்ளூரை அடுத்த திருவூரில் அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏராளமனோர் தங்களது தலைமுடியை ஒழுங்கற்ற முறையில் வெட்டி ஸ்டைலாக வலம் வந்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். தலைமுடியை ஒழுங்காக வெட்டி வருமாறு கூறினர். ஆனால் மாணவர்கள் தங்களது தலைமுடி ஸ்டைலை மாற்றாமல் தொடர்ந்து பள்ளிக்கு வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஒழுங்கற்ற முறையில் தலைமுடியுடன் வந்த 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பை சேர்ந்த சுமார் 50 மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியின் மரத்தடியில் அமரவைத்தனர். பின்னர் அவர்களுக்கு அங்கேயே சலூன் கடை உழியர் ஒருவர் மூலம் சீராக முடி வெட்டப்பட்டது.

    தலைமையாசிரியை ராஜம்மா உத்தரவின் பேரில் பள்ளி ஓவிய ஆசிரியர் அருணன் மேற்பார்வையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×