என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூரில் இருந்து ஆந்திராவுக்கு வேனில் கடத்திய 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது
    X

    மீஞ்சூரில் இருந்து ஆந்திராவுக்கு வேனில் கடத்திய 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது

    • ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
    • ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    மீஞ்சூர் பைபாஸ் சாலை வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து மீஞ்சூர் பைபாஸ் சாலையில் காவல் ஆய்வாளர் சுந்தரம்பாள் தலைமையில், தலைமைக் காவலர்கள் திருப்பதி, சுந்தரபாண்டியன், செந்தில்குமார், டேவிட் சந்தானம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மைக்கேல் லோகநாதன் ஆகியோர் என்றும் மீஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ரேசன் அரிசியை வாங்கி அதை ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 டன் ரேசன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×