என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 18 டன் இரும்பு திருட்டு
- லாரியில் இரும்பு பொருட்களை திருடி ஏற்றிச்சென்ற போது அனல் மின் நிலைய வளாகத்தில் சோதனை செய்தபோது சிக்கியது.
- மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
பொன்னேரி:
அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரண்டாவது நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக மீஞ்சூரை சேர்ந்த சதீஷ்குமார், அக்பர், அத்திப்பட்டு புது நகரை சேர்ந்த சரண்ராஜ் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் அனல்மின் நிலையத்தில் பழைய பொருட்களை கையாளும் பிரிவில் பணி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில அவர்கள் பழைய இரும்பு பொருட்களை சேமிப்பு கிடங்கில் கொண்டு சேர்க்காமல் அதனை திருடி வெளியில் இருந்து லாரியை அனுமதி இல்லாமல் வரவழைத்து வெளியில் கொண்டு சென்று விற்று வந்தனர்.
சம்பவத்தன்று லாரியில் இரும்பு பொருட்களை திருடி ஏற்றிச்சென்ற போது அனல் மின் நிலைய வளாகத்தில் சோதனை செய்தபோது சிக்கியது. இதுகுறித்து அனல்மின் நிலைய நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் லாரியில் 18 டன் எடை கொண்ட 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த பதீஷ்குமார், ஒப்பந்த தொழிலாளர்கள் சதீஷ்குமார், அக்பர், சரண்ராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். லாரியுடன் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






