search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே வேன் மோதி 2 தொழிலாளிகள் பலி
    X

    பொன்னேரி அருகே வேன் மோதி 2 தொழிலாளிகள் பலி

    • பொன்னேரி அடுத்த பூவாமி கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் ஆண்டி.
    • வேனை ஓட்டி வந்த டிரைவர் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பூவாமி கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் ஆண்டி (வயது55). ஆண்டியப்பன் (40). கூலித் தொழிலாளர்கள்.

    நேற்றுமாலை இருவரும் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு காய்கறிகள் வாங்க அருகில் உள்ள மெதூர் கிராமத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    மெதுர் துணை மின் நிலைய அலுவலகம் அருகில் சென்ற போது கும்மிடிப்பூண்டியில் இருந்து பழவேற்காடு நோக்கி வந்த வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆண்டி மற்றும் ஆண்டியப்பன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானர்கள். தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேனை ஓட்டி வந்த டிரைவர் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×