என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கழுக்குன்றம் அரசு பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது
    X

    திருக்கழுக்குன்றம் அரசு பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது

    • திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் செல்லம்மாள்.
    • திருக்கழுக்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் செல்லம்மாள் (70). இவர் கல்பாக்கத்தில் இருந்து திருக்கழுக்குன்றத்திற்கு அரசு பஸ்சில் வந்தார்.

    அப்போது அருகில் அமர்ந்து இருந்த 2 பெண்கள் நைசாக அவரது 3பவுன் தங்க செயினை திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், பகுதிகளில் கைவரிசை காட்டிய பழைய பெண் குற்றவாளிகள் பட்டியலை வைத்து தேடிவந்தனர்.

    இந்த நிலையில் செல்லம்மாளிடம் செயினை திருடியது தொடர்பாக திருப்பத்தூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த மோனிஷா (40), காயத்ரி (28), இருவரையும் திருக்கழுக்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×