என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்றத்தூர்-நெற்குன்றத்தில் விபத்து: காவலாளி உள்பட 2 பேர் பலி
    X

    குன்றத்தூர்-நெற்குன்றத்தில் விபத்து: காவலாளி உள்பட 2 பேர் பலி

    • சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர், குளக்கரை தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 57). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் வேலை முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர் தேரடி அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்தினவேல் பரிதாபமாக இறந்து போனார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச்சென்று விட்டார்.இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (56).கூலித்தொழிலாளி.இவர் இரவு அதே பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ராஜா மீது வேகமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×