என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாடியில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
    X

    பாடியில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது

    • திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அம்பத்தூர்:

    பாடி, தேவர் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது.

    இதுகுறித்து கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பாடி கலைவாணர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற சிவா மற்றும் மேற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×