search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மாபேட்டை அருகே மர்ம விலங்கு கடித்து 17 ஆடுகள் பலி
    X
    மர்ம விலங்கு கடித்து பலியான ஆடுகள்.

    அம்மாபேட்டை அருகே மர்ம விலங்கு கடித்து 17 ஆடுகள் பலி

    • 17 செம்மறி ஆடுகளின் கழுத்துப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும், வயிற்றுப் பகுதியிலும் மர்ம விலங்குகள் கடித்து குதறி உள்ளது.
    • இறந்து போன ஆடுகள் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ளதாகும்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் சக்திவேல் (48) என்பவர் 32 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    இவர் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு பின் மாலை வீட்டு அருகே உள்ள ஆட்டுப்பட்டியின் வெளிப்புறத்தில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் படுத்து இருந்த சக்திவேல் வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து குதறி இருப்பது தெரியவந்தது. இதில் 17 செம்மறி ஆடுகள் கழுத்துப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும், வயிற்றுப் பகுதியிலும் மர்ம விலங்குகள் கடித்து குதறி உள்ளது. இறந்து போன ஆடுகள் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ளதாகும்.

    இதுகுறித்து சென்னம்பட்டி வனச்சரக அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்திருந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×