search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமாபுரத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி மரணம்
    X

    ராமாபுரத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி மரணம்

    • மாடி படி ஏறிய போது ஏழுமலை 2-வது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை ராமாபுரம் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55) கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 13- ந் தேதி மாலை பணி முடிந்து மதுபோதையில் வீடு திரும்பினார். பின்னர் மொட்டை மாடிக்கு செல்வதற்காக மாடி படி ஏறிய போது ஏழுமலை 2-வது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஏழுமலை உயிரிழந்தார். இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×